Saturday, July 16, 2011

கறுப்பு பணம் பதுக்கியோர் தேசத் துரோகிகள்: பாய்கிறார் ஜக்கி வாசுதேவ்



ஓங்கி உயர்ந்த மலைக் குன்றுகள். அதை, எட்டிப் பிடிக்க முயலும் பாக்கு மரங்கள். மேற்கு தொடர்ச்சி மலையின் முடிவில் துவங்குகிறது ஈஷா யோக மையம். தொலை தூரத்தில் கேட்கும் உளியின் ஓசையில், ஆளுயர பாறைகள், அதனதன் உருவம் பெறுகின்றன. மொத்தத்தையும் இயக்கிக் கொண்டிருக்கும் ஜக்கி வாசுதேவ், ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே சந்திக்கிறார். நேரம் கடப்பது தெரியாதபடி பேசுகிறார். இனி அவர்:

அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ், பெஜாவர் பீடாதிபதி வரிசையில், நீங்கள் எப்போது உண்ணாவிரதம் இருக்கப் போகிறீர்கள்?ஒரு கோரிக்கையை வன்முறை கொண்டும் நிறைவேற்றலாம்; உண்ணாவிரதம் இருந்தும் நிறைவேற்றலாம். இரண்டும் இல்லாமல், எதையும் சாதிக்க முடியாதது துரதிர்ஷ்டமே. இங்கு, ஊழல், கற்பனையே பண்ண முடியாத உயரத்தை எட்டிவிட்டது. நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம், கோடி எல்லாம் தாண்டி, லட்சம் கோடி ஊழல்கள் நடக்கின்றன. இதனால் தான் நம் முன்னேற்றம் தடைபட்டிருக்கிறது.

தலைவர்கள் சரியாக இருந்தால், தேசம் முன்னேறும் என்பதற்கு குஜராத்தும், பீகாரும் முன்னுதாரணங்கள். ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு மாதிரி இருக்கிறது. குஜராத்தும், பீகாரும் மட்டும் வேறு தேசம் போலிருக்கிறது.நல்லவர்கள் முதல்வர்களாகவோ, பிரதமர்களாகவோ இருந்தால், கடைசி வரை அவர்கள் தான் அந்தப் பதவியில் இருப்பர். ஆனால், யாருமே அப் படி செய்யவில்லையே.கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைப்பவர்களை, தேசத் துரோகிகள் என்றழைக்காமல், வேறெப்படி சொல்வது? ஒரு பக்கம் மக்கள் பசியாலும், பட்டினியாலும் வாடும்போது, இவர்கள் கறுப்புப் பணத்தில் திளைப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?இந்த கொடுமைகளை எல்லாம் தடுப்பதற்கு, மக்கள் நேரடியாக ஈடுபட வேண்டும். நாட்டு நடப்புகளில் நமக்கும் பங்கு இருக்கிறது என்பதை உணர வேண்டும். அதற்கு, லோக்பால் வரவேண்டும். ஊழல், இங்கு கலாசாரமாகவே ஆகிவிட்டது. யாருக்கும் அதுபற்றிய குற்ற உணர்ச்சி இல்லை. இவற்றுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க, சமூக ஆர்வலர்களின் உண்ணாவிரதப் போராட்டங்கள் ஒரு கருவியாக இருக்கின்றன.இப்படி ஆளாளுக்கு கிளம்பிவிட்டால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதற்கு? அவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மாதிரியே நடந்து கொள்வதில்லையே! ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் போலல்லவா நடந்து கொள்கின்றனர். அதனால் தானே இத்தகைய போராட்டங்களுக்கு அவசியம் ஏற்பட்டுள்ளது. செய்ய வேண்டிய வேலையை அரசு செய்யாததால் தானே, தங்கள் வேலையை விட்டுவிட்டு, மக்கள், வீதிக்கு வரவேண்டியுள்ளது.அதற்காக, சாமியார்கள் அரசியல் செய்யலாமா?

ஏன்? அவர்களும் இந்தச் சமூகத்தின் அங்கம் இல்லையா? அவர்கள் இந்நாட்டு குடிமக்கள் இல்லையா? ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்க வேண்டும் தானே! அவர்கள் பின்னால், லட்சக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். அந்த மக்களுக்கு எது நல்லதோ, அதை அவர்கள் செய்கின்றனர். அரசியலில் தலையிடுவதா, வேண்டாமா என்பதெல்லாம், அவரவர் விருப்பம் இல்லையா?அன்னா ஹசாரே விளம்பரப் பிரியராக இருக்கிறாரோ...போராட்டத்துக்கு முன்பு வரை, அவர் காந்தியவாதியாகத் தெரிந்தார். வழிக்கு வரவில்லை என்றதும், இப்படி பட்டம் கட்டிவிட்டனர். ஹசாரேவுக்கு மாற்றாக பாபா ராம்தேவைப் பயன்படுத்த நினைத்தனர். முடியவில்லை என்றதும், அவர் பெயரையும் கெடுக்க முயற்சிக்கின்றனர்.ஒருவர் ஒரு விஷயத்தைச் சொல்லும் விதம் சரியில்லாவிட்டால் தான் என்ன? அவர் சொன்ன விஷயம் சரியா என்று பார்க்க வேண்டியது தானே.ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை, பாபா ராம்தேவ் மழுங்கடித்துவிட்டாரா? நல்ல வாய்ப்பைப் பயன்படுத்த முடியாமல் தடுமாறிவிட்டார் என்று சொல்வேன். அவர் இப்பிரச்னையைச் சரியாகக் கையாண்டிருந்தால், இன்னும் நாலு பேர் சேர்ந்திருப்பர். மிகப் பெரிய போராட்டமாக வலுப்பெற்றிருக்கும்.

அது இருக்கட்டும். படுத்துக்கொண்டிருந்த அப்பாவி மக்கள் மீது ஓர் அரசால் எப்படி தடியடி நடத்த முடிந்தது? அதுவும் தலைநகரில்! நாலாபுறமும் தடுப்புச் சுவர் கொண்ட மைதானத்தில், பெண்கள் என்றும் பாராமல் தாக்கினரே. ஜனங்களை அடிக்கும் அரசு எப்படி ஜனநாயக அரசாக இருக்க முடியும்! பழிவாங்கும் செயலுக்காக போலீசையும், வருமான வரித் துறையையும் பயன்படுத்த ஆரம்பித்தால் நாடு எப்படி உருப்படும்?ஆனால், தன் அறக்கட்டளைக்கு ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருப்பதாக, அவரே சொல்லியிருக்கிறார்.

என்ன தப்பு? அந்த அறக்கட்டளை, மக்களால் நடத்தப்படுவது. அவர் ஓர் அடையாளம் மட்டுமே. அதை அவர், தன் பெயரிலேயே நடத்தியிருந்தால், யார் தடுத்திருக்க முடியும்? அறக்கட்டளைக்கு ஆயிரம் கோடிகள் இருந்தாலென்ன? அவர் எளிமையாகத் தானே இருந்தார்? தனக்காக எதையும் செய்து கொள்ளவில்லையே! அந்தச் சொத்துக்களுக்கு தணிக்கை நடந்து, கணக்கு காட்டியிருக்கிறாரே.அவரைத் தேடி மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர். நன்கொடை வழங்குகின்றனர். நல்லது செய்யப்போய்த் தானே அவரைத் தேடிச் செல்கின்றனர்! நேற்று வரை நல்லவராகத் தெரிந்தவர், ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்ததும் கெட்டவராகி விட்டாரா?சாய் பாபாவின் படுக்கை அறையிலிருந்து, 12 கோடி ரூபாய் ரொக்கம் எடுக்கப்பட்டது...அவரது உயரத்துக்கு, 12 கோடி ரூபாயெல்லாம் ஒன்றுமே இல்லை. அந்த அறையில் எவ்வளவு இருந்தது என்று, அவருக்கே தெரிந்திருக்காது.

பக்தர்கள் கொடுத்ததை, அப்படியே வாங்கி ஓரமாக வைத்திருக்கிறார். அந்தப் பணத்தைப் பதுக்கி, அவர் என்ன செய்யப்போகிறார்? அவரைத் தேடி கோடிகள் கொட்டப்பட்டபோது, எதற்கு இந்தச் சிறிய தொகையை லட்சியம் செய்யப்போகிறார்! அவர் அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்பது தான் உண்மை!பத்மநாபசுவாமி கோவிலில் கிடைத்த பல கோடி நகைகளை என்ன செய்யலாம்? அங்கு மட்டுமா இருந்தது? இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் இருந்தது. முஸ்லிம் மன்னர்களும், வெள்ளைக்காரர்களும் அதைக் கொள்ளையடிக்கத் தானே இங்கு வந்தனர்! அப்போது கொள்ளையடித்த பணத்தில் தான், ஐரோப்பிய பொருளாதாரம் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர்கள் கொள்ளையடித்தது போக, மீதமிருந்த கோவில்களின் நகை எல்லாம் எங்கே? அதைக் கேட்காமல், இதை என்ன செய்வது எனக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்!பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் அரசாங்கம் கட்டட்டும். சுதந்திரம் கொடுத்தால், தனியார்கள் கட்டுவர். கோவில் சொத்தில் ஏன் கட்ட வேண்டும்? சுரண்டுவதை நிறுத்தினாலே அரசாங்கத்துக்குத் தேவையான பணம் கிடைத்துவிடும்.

எந்த நாட்டிலும் இப்படி ஒரு அநீதி கிடையாது. ஒரு மதத்தினர் மட்டும், அவரது விருப்பத்துக்கு ஏற்ப வழிபாட்டுத் தலம் கூட நடத்த முடியாது. அரசு எடுத்துக்கொள்ளும் என்று பயம். கோவிலை ஆன்மிகவாதிகள் நடத்த வேண்டுமா? அரசு கிளார்க்குகள் நடத்த வேண்டுமா? மற்ற மத வழிபாட்டுத் தலங்களில் இப்படிச் செய்ய முடியுமா? தேசம் எரிந்துவிடும் என்பதால் தானே இந்து மதத்தில் மட்டும் பண்ணுகிறீர்கள்.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது...மாநிலம், தொழில் துறையில் நல்ல வளர்ச்சி பெற்று வந்தது. ஆனால், ஊழல் கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. அரசு மாறிவிட்டது.புதிய அரசு, பல்வேறு விஷயங்களை சிறப்பாக முன்னெடுத்துச் செல்கிறது. தொடர்ந்து, மக்கள் நலனில் அக்கறை கொண்டு, மக்கள் பணியாற்ற என்னுடைய அன்பும் ஆசிகளும்!

ஆர்.ரங்கராஜ் பாண்டே

நன்றி : தினமலா் நாளிதழ்

ahh; Fuy; nfhLj;jhYk; mtuJ Fyk; Nfhj;jpuk; ghHf;fhky; mtiu Mjhpg;;Nghk;

ed;wp [f;fp thRNjt; mtHfNs.

md;Gld;

tuhfd;.



Saturday, February 5, 2011

இந்திய கருப்புப் பணம் அயல் நாட்டில் 15 நபர்கள் பட்டியல்


இந்திய கருப்புப் பணம் அயல்நாட்டில் பதுக்கியவர்கள் பட்டியலை தெகல்கா பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

2009ல் ஜெர்மனி அரசு, LGT bank of Liechtenstein (190 km from Munich, Germany.)

என்ற வங்கியிடம் இருந்து தாம் பெற்ற பட்டியலை

(மார்சு 18 2009ல்) நமது நாட்டிம் அதிகாரபுர்வமாக கொடுத்தது.

மன்மோகன் சிங் அரசு அதை வெளிவிடாமல் இரண்டு ஆண்டுகள் பாதுகாத்து வந்தது.

அந்த பட்டியலை தெகல்கா பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.



2010 பிப்ரவரி 6 ல் தெகல்கா பத்திரிக்கை அதை வெளியிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் பலமுறை கேட்டும் அதை வெளியிட மறுத்து வந்தது மன்மோகன் அரசு.

அவர் நல்லவர் தான் ஆனால் அவரை ஆட்டுவிக்கும்

இத்தாலிய அரசின் முடிவால் அவரால் வெளியிடமுடியவில்லை.

ஜெர்மனி அரசு தான் பெற்ற 1600 லிஸ்டில் இருந்து இந்தியர்கள் என்று நம்பப்படுவர்கள் என்று

தான் கருதிய 18பேர் பட்டியலை கொடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகியும்

இந்திய அரசு உச்சநீதிமன்றம் கேள்வி கேட்க ஆரம்பிக்கும்

வரை அவர்களை பாதுகாக்கவே தனது பொன்னான நேரத்தை செலவிட்டது.

அதில் உள்ளவர்கள் என்று நம்பப்படும் 15 பேர் கொண்ட பட்டியலை முதலாவதாக தெகல்கா பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

இதோ அந்த பட்டியல்

1. Manoj Dhupelia

2. Rupal Dhupelia

3. Mohan Dhupelia

4. Hasmukh Gandhi

5. Chintan Gandhi

6. Dilip Mehta

7. Arun Mehta

8. Arun Kochar

9. Gunwanti Mehta

10. Rajnikant Mehta

11. Prabodh Mehta

12. Ashok Jaipuria

13. Raj Foundation (registered outside India.)

14. Urvashi Foundation(registered outside India.)

15. Ambrunova Trust (registered outside India.)

இந்த பட்டியல் LGT bank of Liechtenstein (190 km from Munich, Germany.)என்ற ஒரு வங்கியில் உள்ள பணம் முதலீடு செய்தவர்கள் மட்டுமே.

ஜெர்மனி தனது நாட்டவரான 600 பேரின் பேரில் நடவடிக்கை எடுத்து கிட்டதட்ட முடிவடைந்து விட்டது.

நமது நாட்டில் எப்பொழுது விசாரணையை ஆரம்பிப்பது?

அதற்குள் காலம் கடந்து விடும்.

மேலும் விபரங்களுக்கு

http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne120211TheList.asp






Tuesday, February 1, 2011

பதிவர்களே தமிழ் திரட்டிகள் 25 இதோ உங்களுக்காக



உங்கள் பதிவுகளை பிரபலம் அடையச் செய்ய

கிழ் கண்ட திரட்டிகளில் உங்கள் படைப்புகளை பதிந்து சாதணைபடைக்க வாழ்த்துகிறேன்.

நம் மீனவர்கள் வாழ்வில் ஒளிவீச சிங்களத்தீவினிர்க்கோர் புது பாலம் அமைப்போம்.

சீன படையின் புதுத் தெம்பில் வலம் வரும் இலங்கை படைவீரர்களிடம் அகப்படும் நம் சகோதரர்களுக்கு (நம் மீனவர்களுக்கு) குரல் கொடுங்கள்.

படைப்புகளில் உங்கள் குரல் ஒலிக்கட்டும்.

மறக்காமல் உங்கள் கருத்துக்களோடு வாக்களியுங்கள்.


http://ww2.aranijothish.com/



http://www.etamil.net/

http://yaaldevi.com/
http://www.namkural.com/
http://www.newspaanai.com/

http://www.valaipookkal.com/
http://ta.tamilers.com/
http://tamilpoint.blogspot.com/
http://tamilulagam.0fees.net/submit/



http://www.bogy.in/
http://iniyatamil.striveblue.com/bookmarks/



http://www.valaiyakam.com/

http://www.thiratti.com/

http://thalaivan.com/blog/

http://www.tamilveli.com/v2.0/index.html
http://www.tamildaily.com/
http://tamil.blogkut.com/
http://tamilblogs.corank.com/tech/submit/

http://www.ellameytamil.com/submit/
http://thatstamil.oneindia.in/bookmarks/submit


http://ulavu.com/

http://wiki.pkp.in/



http://tamilmanam.net/


http://ta.indli.com/
http://www.tamil10.com/

சொல்ல முடியாத

வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத

துயரங்களை அனுபவிக்கும்

இந்திய மீனவர்களுக்கு இந்த பதிவு சமர்பணம்.


Wednesday, January 12, 2011

சிவபுரத்து நடராஜரின் வெளிநாட்டு பயணம் பாகம் - 2


சென்ற பாகத்தில் நடராஜர் சிலை சீர்படுத்த ஒரு ஸ்தபதியிடம் கொடுத்த தாக சொல்லி இருந்தேன் அந்த ஸ்தபதி அதே போல் இன்னோரு நடராஜர் சிலையை வடித்து சிலை சீர்படுத்தியாகிவிட்டது என்று கூறி போலி நடராஜரை சிவபுரம் கோயில் நிர்வாகத்திடம் கொடுத்து விட்டார்.

இது நடந்தது யாருக்கம் தெரியாது.

நடராஜர் எவ்வாறு கைமாறினார் என்பதை கீழே காணலாம்


ஸ்தபதி ரூ. 7,000 க்கு தஞ்சாவுரை சேர்ந்த 3 பேரிடம் விற்க

தஞ்சை 3வர் ரூ. 15,000 க்கு பம்பாயில் இருந்த பிரிட்டி பத்திரிக்கையாளரிடம் விற்க

பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர் அதை ரூ. 25,000 க்கு கலைபொருள் விற்பணையாளரிடம் விற்க

விற்பணையாளர் அதை ரூ. 3,00,000 க்கு பென் கெல்லர் என்ற வெளி நாட்டவருக்கு விற்க

பென் ஹெல்லர் அதை ரூ. ஒரு கோடிக்கு ($900,000) நாட்டன் சைமன் என்ற பவுண்டேசனுக்கு விற்றார்.

இப்படியாக சிவபுர நடராஜர் வெளிநாடு சென்றார்.

டக்லஸ் பாரட் தனது ஆராய்சிக்கட்டுரையில் இதை வெளிவிடும் வரை இந்த செய்தி யாருக்கும் வெளியில் தெரியவில்லை.

திடுக்கிட்டனர். தொல்பொருள் இலாகாவினர்.

தாமதமாக விளித்துக் கொண்ட தமிழ்நாடு அரசு S.கிருஷ்ணராஜ் என்ற (Deputy Inspector General, CID) அதிகாரியை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது.

இந்த அதிகாரியின் புலனாய்வின் படி நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் புகார் பதிவானது.

ஸ்காட்லாந்து போலிஸ் உதவியுடன் சிலை மீட்க உதவி கோரப்பட்டது.

இங்கிலாந்தை சேர்ந்த அண்ணா பொளல்டன் என்பவரிடம் சிலை இருந்தது.

இந்திய அரசு அமெரிக்க நாட்டன் சைமன் பௌண்டேசன் (Norton Simon Foundation) மேல் வழக்கு தொடுத்தது.

அமெரிக்க அரசின் உதவியை இந்திய வெளியுறவுத் துறை மூலம் தொடர்பு கொண்டு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு சைமனிடன் ஒப்பந்தம் செய்து

சிலை 1987 ல் இந்திய தொல் பொருள் துறையின் டைரக்டர் ஜெனரல் திரு.M.S. நாக ராஜ ராவ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்பொழுது சிவபுர நடராஜர் சென்னை மயிலாப்புர் கபாலிசுரர் ஆலயத்தில் அமர்ந்துள்ளார்.

விரைவில் நமக்கு தரிசனம் தர அவர் தான் மனது வைக்க வேண்டும்.

சிவபுரத்து நடராஜரின் வெளிநாட்டு பயணம் பாகம் 1


1951 ல் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிவபுரத்தில் அன்னமுத்து படையாட்சி என்ற விவசாயியின் நிலத்தைத் தோண்ட தொழிலாளர்கள் ஒரு வெண்கல நடராஜர் சிலையை கண்டேடுத்தனர்.

புதையல் சட்டப்படி அது அரசு வசமாயிற்று.

அப்போதைய கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அது பத்தாம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும் சிவபுரம் கோயிலைச் சேர்ந்தது என்று தெரியவந்தஉடன் கோவில் நிர்வாகம் கேட்க

1953 ல் மாவட்ட கலெக்டர் அதை சிவகுருநாத சுவாமி கோவிலிடம் ஒப்படைத்தார்.

நடரஜர் சிலையில் சிலபகுதி நசுங்கி இருந்ததால் சீர்படுத்த ராமசாமி என்ற ஒரு ஸ்தபதியிடம் கொடுத்தனர்.

அவரும் அதை சீர்படுத்தி கோவில் நிர்வாகத்திடம் கொடுக்க அவர்களும் அதை பெற்று கோவிலில் முறைபடி வைத்து வழிபட வசதி செய்து கொடுத்தனர்.

சில ஆண்டுகள் கழிந்தது.

டக்லஸ் பாரட் என்ற பிரிட்டிஷ் மியுசியத்தை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சிவபுரம் வந்தார். நமது நடராஜரை பார்த்தார் அவர் அதை போலி என கண்டார். (அவர் வந்த ஆண்டு 1957) இங்கிலாந்து சென்ற உடன் தனது புத்தகத்தில் (South Indian Bronze) கோவிலில் இருப்பது போலி.

உண்மையான நடராஜர் இருப்பது அமெரிக்க கலைபொருள் சேகரிக்கும் நபரிடம் உள்ளது என திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.

சிவபுரம் நடராஜர் எப்படி அமெரிக்கா சென்றார்.

அது தனிகதை பாகம் இரண்டில் காண்க.





Saturday, January 8, 2011

இணையத்தில் உள்ள வீடியோவை எந்த சாப்ட்வேரும் இல்லாமல் இணையத்தில் இருந்தே பதிவு இறக்கம் செய்ய







இணையத்தில் உள்ள வீடியோவை எந்த சாப்ட்வேரும் இல்லாமல் இணையத்தில் இருந்தே பதிவு இறக்கம் செய்ய


எனக்கு computer பற்றிய அறிவு மிக மிக குறைவு.

இருந்தாலும் என் போன்ற Computer Knowledge அதிகம்

தெரியாதவர்களுக்காக இப்பதிவு.

இணையத்தில் உள்ள வீடியோவை நாம் download செய்ய இந்த

முறை மிக எளிது.

கீழே உள்ள தலத்திற்க்கு முதலில் செல்லுங்கள்


http://keepvid.com/?url=http%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DvwnNp1dbL2g%26feature%௩ரெலதெட்


அதில் URl என்று ஒரு கட்டம் இருக்கும் அதில்

நீங்கள் தரவிரக்கம் செய்ய நிணைக்கும் வீடியோ

தலத்தின் Url ஐ காப்பி செய்து போடவேண்டும்

பின்னர் அதன் அருகில் உள்ள Download என்ற

பட்டனை தட்டினால் போதும்

இப்பொழுது கிழே அதே பக்கத்தில்


›› Download FLV ‹‹ - Low Quality - 400×226
›› Download FLV ‹‹ - Medium Quality - 640×360
›› Download MP4 ‹‹ - High Quality - 480x360

டவுன் லோடு ஆகி காட்டும் அதில் தாங்கள் மூன்றாவதை தேர்வு செய்தால்

(எது வேண்டுமோ அது) உடனடியாக தாங்கள் தரவிரக்கம் ஆக வேண்டிய

இடத்தை (நமது computer ல்) கேட்கும் நாம் தேர்வு செய்த

உடன் download எளிதாக முடிந்து விடும்

you tube ல் உள்ள வீடியோவை இதில் மிக விரைவாக தரவிரக்கம் செய்யலாம்.

you tube download software இலலாமல் தரவிரக்கம் செய்யமுடியும்.

இதனால் நமக்கு நமது computer ல் இடம் மிச்சமாகும்.

லெட் என்ற ஈயம் Lead paint


லெட் என்ற ஈயம்

Lead paint


பெயிண்ட் சிறப்பானதாக மற்றும் விலை குறைவானதாக இருக்க பெரிதும் பயன்படுவது ஈயம்.

ஆனால் இது ஒரு அபாயகரமான பொருள்.

குழந்தைகள் உபயோகிக்கும் விளையாட்டு பொருளில் இந்த பெயிண்ட் (பெரும்பாலும்

சீன தயாரிப்பில் அதிகம்) பயன்படுகிறது.

அது குறிப்பாக ஆறு வயதுக்கு குறைந்த குழந்தைகளுடைய வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இது நரம்பு மண்டலத்தை பாதிக்கும்

இதனால் மூளை பாதிக்கப்பட்டு மன வளர்ச்சி பாதிப்பு எற்படும்.

குழந்தைகளின் வளர்ச்சியை (Growth) தடுக்கும். முன்னேற்றத்தை தாமதிக்கும்.

இது சிறுநீரகத்தை பாதிக்கும்.

மேலும் உடலின் ஒவ்வொரு உறுப்பையும் பாதிக்கும்.

பெரியவர்களின் ஆண்மை தன்மையை பாதித்து மலடாக்கும்

இது குழந்தைகள் வாயில் படும் பொழுது சிறது இனிப்பு சுவை இருப்பதால்

அக்குழந்தைகள் அதை கடிக்க மற்றம் சுவைப்பதால் நச்சுத்தன்மை கொண்ட பொருள் உள்ளே செல்ல வாய்ப்பு எற்படுகிறது.

1977 லேயே அமெரிக்கா இதை தடை செய்து (16 Code of Federal Regulations CFR 1303)

சட்டம் இயற்றி உள்ளது.

அமெரிக்காவில் உள்ள (CPSC instituted the Consumer Product Safety Improvement Act of 2008 ) இந்த சட்டத்தின் படி பெயிண்டில் உள்ள ஈயத்தின் அளவு 0.06% (w/w) to 0.009%, or 90ppm, தான் இருக்க வேண்டும் என உறுதி செய்துள்ளனர்.

மேலும் விபரம் அறிய இந்த வலைதளத்தில் பார்க்கலாம்

http://www.cpsc.gov/cpscpub/prerel/prhtml77/77096.html

நமது நாட்டில் ஈயத்தின் அளவு நாம் நிணைத்திராத அளவு ஆயிரத்துக்கு மேல்

அதற்கு வரைமுறையே இல்லை என்பதே உண்மை.

இது பற்றிய ஒரு விளிப்புணர்வு தேவை.

இதை ஊடகங்கள் கண்டிப்பாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

ஆங்கிலத்தில் இதை lead என்று அழைப்பார்கள்

இது பெயிண்டில் விரைவாக காய்வதற்காகவும்

நீடித்து உழைப்பதற்காகவும்

சிறப்பான தோற்றத்திற்காகவும்

resist moisture க்காகவும் இதை

பெயிண்ட் தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள்.

இந்த lead இல்லாத(குறைவான) பெயிண்ட் கடைகளில் கிடைக்கிறது.

அதை கேட்டு மக்கள் வாங்க ஊக்கப்படுத்த வேண்டும்.

இது மிகவும் அவசியம்.

வீடு கட்டும் அனைவரும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

குழந்தைகள் உபயோகிக்கும் விளையாட்டு பொருளில்

இதை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்றால்

இதன் விலை மலிவு என்பதால் தான்

இதை கீழ்கண்ட வலைமனையில் தெரிந்து கொள்ளலாம்

http://www.nytimes.com/2007/09/11/business/worldbusiness/11lead.html