Thursday, September 27, 2012

உடல் எடையைக் குறைக்க


உடல் எடையைக் குறைக்க 


உடற்பயிற்சி,
உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்.

என்ன செய்யலாம்?

ஈசா யோகா அல்லது ரவிசங்கர்ஜீயின் சுதர்சண கிரியா செய்யலாம் மிகவும் எளிமையானது. 30 நிமிடங்கள் போதும்.

ஈசா யோகாவின் பழைய 13 நாட்கள் பயிற்சி மிகவும் நல்லது

ஆனால் தற்போது அந்த பயிற்சி அங்கு அளிக்ப்படுவதில்லை

அதற்க பதிலாக இப்பொழுது ஏழு நாட்கள் சாம்பவி மகாமுத்ரா பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதற்க்கு அடுத்த பயிற்சியான        சுன்யா (Soonya) பயிற்சியில் பழைய 13 நாள் பயிற்சி வகுப்பு பாடம் இடம் பெறுகிறது

அளவான உடற்பயிற்சி உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதோடு, ஆயுள்காலத்தையும் அதிகரிக்கிறது.

எதை சாப்பிடலாம்?

தினமும் ஐந்து கப் காய்கறி அல்லது பழம் சாப்பிட வேண்டும்.

கீரை வகைகள், பீன்ஸ் அவரை, புடலங்காய், பூசணி காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.


சீசனல் பழங்கள் எல்லாம் சாப்பிடலாம். 
ஆனால், மாம்பழம் பலாப்பழம், கிழங்கு வகைகள் போன்றவற்றை குறைத்து கொள்ளவேண்டும்.

பப்பாளிக் காய், முள்ளங்கியை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்ளவும்.

எந்த சூ‌ப் சாப்பிடலாம்?

வாழைத்தண்டு சூ‌ப் செய்முறை

வாழைத்தண்டைத் துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து ஜுஸ் பிழிந்து ​ வடிகட்டிக் கொள்ளவும்.

பார்லியை இளம் சிவப்பாக வறுத்துப் பொடியாக்கவும்.
அரை லிட்டர் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும்.
வாழைத் தண்டு சாறில் பார்லி மாவைக் கலந்து கொதிக்கும் தண்ணீரில் ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பின் இறக்கி வைத்து மிளகுப் பொடி உப்பு,​ எலுமிச்சம்பழச்சாறு மற்றும் பால் சேர்த்து சூடாக அருந்தவும்.


அறுகம்புல் சூ‌ப் செய்யும் முறை

இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்
சித்த வைத்தியத்தில் மிகவும் சிறப்பாகக் கூறப்படும் ஒரு தாவரம் அருகம்புல்லாகும்.
இதன் ஆங்கில பெயர் Cynodon doctylon ஆகும்

மேலும் பூசணி    மற்றும் தடியங்காய் சூ‌ப் சாப்பிடலாம்.

 இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட, 40 நாட்களில் தொப்பை குறையும்

இவற்றுடன் நான் மேலே சொன்ன ஈசா யோகா செய்ய 30 நிமிடங்கள் தான் 
தேவை . 

இவற்றை செய்தால் மனநலத்துடனும் உடல்நலத்துடனும் 
தொப்பை தொல்லையின்றி வாழலாம்.

பூசணிக்காய்



பூசணிக்காய்

இதைச் சமைத்துச் சாப்பிட்டால்

நரம்பைப் பற்றிய நோய்கள்,

நரம்புத் தளர்ச்சி,

வயிற்றுப்புண்

மேகவெட்டை,

பிரமேக நோய்

ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும்.

உடல் சூட்டைத் தணிக்கும்.

சிறுநீர் வியாதிகளை நீங்கும்.

உடல்வலி தீரும்.

புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.

மருத்துவத்தில் பூசணிக்காயின் கதுப்பு, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன.

நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.

ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் சிறுநீரக நோய்கள், ரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல், பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.

இதய பலவீனம் உள்ளவர்களுக்கு
வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.


நெஞ்சுசளி குறைய
பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச்சளி குணமாகும்.

நீரழிவு நோயை கட்டுப்படுத்த
பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிடவேண்டும்.

ரத்தச் கசிவை நிறுத்த
பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிடவேண்டும்.

வலிப்பு நோய் தீவிரம் குறைய
பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிடவேண்டும்.

சிறுநீரகத்தில் ஏற்படும் நோய் நீங்க ரத்தம்,சீழ் கலந்த சிறுநீர்
வெளியேறாமல் தடுக்க

பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிடவேண்டும்.

மஞ்சள்காமாலை நோய் குணமாக
பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும் (தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2_3 வேளை சாப்பிடவேண்டும்.

தேக புஷ்டி உண்டாக,உடல்சுட்டை தணிக்க,பித்த நோயை குணப்படுத்த
பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிடவேண்டும்.

வெண்பூசணி லேகியம்
நன்கு முற்றிய பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டிலும் தேவையான அளவு எடுத்துக்கொண்டு இதில் 3.500 கிராம் எடுத்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்து மிக்சியில் நன்றாக மசியும்படி அரைத்துக்கொண்டு வடிகட்டி, நீரையும் கதுப்பையும் தனித்தனியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். வடித்து எடுக்கப்பட்ட பூசணிச் சக்கையை 500 கிராம் நெய்யில் மொற மொறப்பாகும்படி வறுத்து எடுத்து, நெய்வேறு, பொறிக்கப்பட்ட சக்கை வேறாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பூசணிக்காய் பிழிந்த சாற்றில் கல்கண்டு சேர்த்து பாகுபதம் வரும்வரை காய்ச்சி, இந்த பாகில் வறுத்த பூசணிக்காய்த் தூளைக் கொட்டிக் கிளற வேண்டும். திப்பிலி, சுக்கு, சீரகம் இவற்றின் பொடிகள் தலா 70 கிராம், லவங்கப்பட்டை, ஏலரிசி, பச்சிலை, தனியா, மிளகு இவற்றின் பொடிகள் தலா 20 கிராம். இவைகளை மேற்கண்ட மருந்துடன் கலந்து, வடித்து வைத்துள்ள நெய்யையும் சேர்த்து, நன்றாக எல்லா மருந்துகளும் ஒன்று சேர கிளறி வைத்துக் கொள்ளவும்.

வேளைக்கு 10 கிராம் அளவில் தினசரி 2_4 வேளை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும்.

பயன்கள்
சுவாச உறுப்புக்கள் பலப்படும்
இருதய பலவீனம் நீங்கி பலப்படும்
நல்ல பசியுண்டாகும்.
மலச்சிக்கல் இருக்காது.
பொதுவாக உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும்.
ஈசனோபைல் நிவர்த்தியாகும்.
டான்சில்ஸ் தொல்லைக்குச் சிறந்தது.


குறிப்பு
பூசணி லேகியம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்




Tuesday, May 15, 2012

நாகர்கோவில் ஈசா வகுப்பு

நாகர்கோவிலிக்கு சத்குரு வருகிறார் .

ஈசா வகுப்பில் சத்குருவிடம் நேரடியாக பயிற்சி பெற விருப்புவோர் கிழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

விபரங்களுக்கு


Sadhguruvudan Isha Yoga

in Tamil 
Date:
29 Jun - 1 Jul 2012
Location:
Desiha Vinayagar Nagar,
velladichivilai - kannankulam
Nagercoil, India
Details:
Program E-    flyer
This program is conducted by Sadhguru.
For questions or offline registration details:
Contact 1:
Phone:
83000 66000

Email:
Contact 2:
Phone:
83000 67000







ஈசா அன்பர்களுக்கு மட்டும்

மற்றவர்கள் கண்டிப்பாக முறையாககற்றுக்கொண்டு (ஈசா பயிற்சி வகுப்பில்)

அதன் பின் பயிற்சி செய்யவேண்டும்

இதனை தொடர்ந்து செய்ய முடியாதகாரணத்தால் அதனை மறந்துபோனதாகவும்,ஞாபகப்படுத்தும்படியும் எனது நண்பர்கள்ஈசா பயிற்சி பெற்ற நண்பர்கள்) கேட்டுக்கொண்டனர்


அவர்களுக்காகவே இது தொகுக்கப்பட்டுள்ளது



யோகா பயிற்சிக்கு முன் அல்லது உணவுக்க முன்

அ.... ம்... அ......ம்..அ.....ம்... ( ஓம்... ஓம்...ஓம்...) 
ஸஹனா வவது ஸஹனௌ புனக்து
ஸஹவீர்யம் கரவாவஹை
தேஜஸ்வினாவதீதமஸ்து
மாவித் விஷா வஹை ஹி
ஓம் சாந்தி... சாந்தி...சாந்திஹி


தமிழில் இதன்பொருள்


கூடியிருப்போம். கூடியிருந்துண்போம்
கூடியிருந்து ஆற்றலைப் பெருக்குவோம்.
நமது ஆற்றல் அளவற்றதாகட்டும்.
நம்மிடையே தீய உணர்வு இல்லாது போகட்டும்.
ஓம் சாந்தி... சாந்தி...சாந்தி



யோகப் பயிற்சிக்கு பின்




அ.... ம்... அ......ம்..அ.....ம்... (ஓம்... ஓம்... ஓம்.)..

அஸத்தோமா ஸத்கமய

தமஸோமா ஜ்யோதிர்கமய

ம்ருத்யோர்மா அம்ருதங்கமய

ஓம் சாந்தி... சாந்தி...சாந்திஹி


தமிழில் இதன்பொருள்



எம்மைப் பொய்மையிலிருந்து மெய்மைக்கும் இருளிலிருந்து ஒளிக்கும் (அறியாமையிலிருந்து மெய்மைக்கும் தெளிவிற்கும்) நிலையாமையிலிருந்து நிலைப்பேற்றிற்கும் இட்டுச் செல்வாயாக.


சாம்பவி மகா முத்ரா


சாம்பவி மகா முத்ரா பயிற்சியின் முறைகள்

1.பதங்காசனா

பட்டாம்பூச்சி மாதிரி காலை மடக்கி வைத்துக்கொண்டு மேலே கீழே 2 நிமிடங்கள் செய்ய வேண்டும்

2. சிசுபாலாசனா

வலது காலை இடது கை நடுவில் வைத்துக்கொண்டு குழந்தையை தாலாட்டுவது போல் செய்யவேண்டும்(2 நிமிடம்)
அதேபோன்று இடது காலை வலது கை நடுவில் தாங்கிக்கொண்டு, குழந்தையை தாலாட்டுவது போல் செய்யவேண்டும், இதுவும் 2 நிமிடம்

3. நாடி விபாசனா

இதனை மூன்றுமுறை செய்துமுடிக்கவேண்டும். பூனை போன்று முதுகை நன்றாக வானவில்லை போல செய்யவேண்டும், பின்னர் முதுகுதண்டை கீழாக இறக்கவேண்டும் , மூச்சை தலை உள்வாங்கும்போது வெளியேற்றவேண்டும், தலையை மேல்நோக்கும்போது மூச்சை உள் வாங்கவேண்டும். குனிந்துகொண்டே வலது காலை நெற்றிதொட செய்து வெளிநீட்டவேண்டும், இதையே இடதுகாலிலும் தொடரவும்


4. சுகக்கிரியா


அர்த்தாசனத்தில் உட்கார்ந்து 7 நிமிடங்கள்
இதனை செய்யவேண்டும்


5. ஓம்

21 முறை “அ” “உ” “ம்” அதாவது ஓம் என்று கூறவேண்டும்




6. விபரீத சுவாசம்


தலையை சற்றே உயர தூக்கி மூச்சை இடது நாசி வழியாக உள்ளே இழுத்து வலது நாசிவழியாக வெளியே விடவேண்டும் .
மூன்று நிமிடங்கள் செய்து முடித்த பின் இடது நாசி வழியாக மூச்சை வெளியே விட்டு முடிக்க வேண்டும்.

7. பூட்டு (ஓஜஸ்)


மூச்சை நன்றாக உள்ளிழுத்து தலையை பின்னோக்கி சாய்த்து கழுத்தை உள்ளிழுத்து பின்னர் தலைகவிழ்த்து பூட்ட வேண்டும், வயிற்று பகுதியை இறுக்கவேண்டும், மலவாயை சுருக்கவேண்டும், இப்படியே ஆனந்தமாக எவ்வளவு நேரமிருக்கமுடியுமோ இருக்கவேண்டும்.


பின்னர் கழுத்தை நேர்வைத்து மூச்சை வெளியிடவேண்டும், கழுத்தை பின்னோக்கி சாய்த்து, உள்ளிழுத்து மறுபடியும் பூட்ட வேண்டும், இந்த நிலையில் எவ்வளவு நேரம் சுகமாக இருக்கமுடியுமோ இருக்கலாம். பின்னர் கழுத்தை நேராக்கி மூச்சை உள்ளிழுத்து , வயிற்றையும், மலவாயையும் தளர்வாக விடவும்

8. ஆனந்தமாக மூச்சை கவனிக்கவும்


மேல் கூறியவற்றை முடித்தபின் மூச்சை நன்றாக கவனிக்கவும் , ஓரே சீராக இருக்கும்!, இரண்டு , மூன்று நிமிடங்கள் இந்நிலையில் இருந்தவுடன் கைகளால் வணங்கி முகத்தை துடைத்துக்கொண்டு , மெதுவாக கண்களை திறக்கவும்(முதலில் தரையை பார்த்து பின்னர் பார்வையை மேல்நோக்கி கண்களை திறக்கவேண்டும்).

பின் குறிப்பு


இக்குறிப்பு முறையாக ஈசா பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே

இதை வைத்து பயிற்சியை செய்யவேண்டாம்.

உங்கள் உடல் நலத்தை பாதுகாக்க விரும்பினால்

நீங்கள் உங்கள் ஊரிலேயே இப்பயிற்சியினை மேற்கொள்ளலாம்.

 http://ishafoundation.org ல் நிகழ்ச்சி தேதிகளை தெரிந்துகொள்ளுங்கள். 

ரூ.900 மட்டுமே நன்கொடையாக அளித்து நீங்கள் இந்த “சாம்பவி மகா முத்ரா” வை கற்றுக்கொள்ளலாம்

உங்கள் ஊரில் நடைபெறவில்லை என்றால் வருகின்ற ஜீன் மாதம்
நீங்கள் சத்குருவின் நாகர்கோவில் (29 ஜீன் முதல் 1 ஜுலை வரை)
அல்லது
பாண்டிச் சேரி (22 - 24 Jun 2012) பயிற்சி வகுப்பல் கலந்து கொள்ளலாம்

விபரங்களுக்கு

நாகர் கோவில் வகுப்பு பற்றிய விவரங்களுக்கு

Sadhguruvudan Isha Yoga

in Tamil 
Date:
29 Jun - 1 Jul 2012
Location:
Desiha Vinayagar Nagar,
velladichivilai - kannankulam
Nagercoil, India
Details:
Program E-    flyer
This program is conducted by Sadhguru.
For questions or offline registration details:
Contact 1:
Phone:
83000 66000

Email:
Contact 2:
Phone:
83000 67000























பாண்டிச்சேரி வகுப்பு பற்றிய விவரங்களுக்கு

Sadhguruvudan Isha Yoga

in Tamil 
Date:
22 - 24 Jun 2012
Location:
Tagore Art College ground,
Pondicherry, India
Details:
Program E-    flyer
This program is conducted by Sadhguru.
For questions or offline registration details:
Contact 1:
Phone:
83000 16000

Email:
Contact 2:
Phone:
94878 95876





Sunday, May 6, 2012

isha yoga

last Year  I participate isha yoga class
It is very interesting and also touch my soul.